Tuesday, September 7, 2010

நடிகர் முரளி மரணம்

                                

     தினமலர் செய்தி:

சென்னை :சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 47 வயதான அவர் இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம், புதுவசந்தம், ஆனந்தம், வெற்றி‌கொடிகட்டு, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டது. புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தையும் முரளியை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான். தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.



                 தினமலர் செய்தியை என்னால் நம்பவே முடியவே இல்லை.. சமீபத்தில் கூட அவரும் அவர் பையனும், ஒரு டிவி ஷோவில் கலந்துரையாடியது இன்னும் என் கண்ணை விட்டு போகலை.. அதற்குள் அவர் இந்த உலகத்தை விட்டுட்டு போனது ரொம்ப கஷ்டமா இருக்கு,,, 


       "இதயம்" என்ற வார்த்தைக்கும் , அவருக்கும் , அவரோட  கடைசி காலம் வரைக்கும் ஏதோ நேரடி தொடர்பு இருந்துருக்கு.. 


அவரோட ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.. அவர் மனைவிக்கும்  அவரோட  மகன் அதற்வாக்கும் , என் ஆழ்ந்த வருத்தங்கள்..




வருத்ததுடன்,
மதுரை பாண்டி.. 

4 comments:

govindasamy said...

அவரோட ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
unmaivrumbi,
mumbai.

Ahamed irshad said...

அதிர்ச்சியான செய்தி..

TBR. JOSPEH said...

நல்ல யதார்த்தமான நடிப்புக்கு உரியவர் முரளி. மிகவும் இளம் வயதில் மரித்தது மிகவும் துரதிர்ஷ்டம். கடந்த வாரம் ரஜினியின் திருமண விழாவில் கூட அவரை காண முடிந்தது. அவருடைய ஆன்மா சாந்தி அடையவும் அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தரவும் இறைவனை வேண்டுகிறேன்.

ChithiraiNila said...

ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space